மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி: கோவையில் சுதந்திர தின விழா கோலாகலம்
கோவை மாவட்ட வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நாட்டின் 77-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
Advertisment
கோவை வ.உ.சி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
தொடர்ந்து கோவை மாநகர, மாவட்ட போலீசார் 109 பேர், அரசு அலுவலர்கள் 153 பேர், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் 15 பேர், மொழி போராட்ட தியாகிகள் 4 பேர் என மொத்தம் 281 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், மேற்கு மண்டல ஐஜி பவானிஸ்வரி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கோவை சரக டிஐ ஜி சரவண சுந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா போலீஸ் துணை கமிஷனர்கள் சந்தீஷ் சண்முகம் மதிவாணன் சுகாஷினி மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.