பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்
கடந்த இரண்டு மாதங்களாக தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த வெயிலுக்கு கோவை நகரம் விதிவிலக்க. அந்த அளவிற்கு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இந்நிலையில், நேற்று முதல் கோவையில் லேசான மழை சில இடங்களில் பெய்தது.
இன்று கோவை நகரின் சில இடங்களில் சுமார் ஒரு மணி நேரமாக லேசான சாரல் மழை பெய்து வருகிறது. கோவை பந்தய சாலை, ரயில் நிலையம், சுங்கம், அண்ணா சாலை, புலியகுளம், ராமநாதபுரம், உள்ளிட்ட நகரின் சில பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. கோவையில் குளிர்ந்த சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil