Advertisment

கோவையில் 20 ஆண்டுகள் பழமையான சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்

பொதுமக்கள் தகவல் அளித்ததை தொடர்ந்து சுந்தராபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coimbatore

Coimbatore sandalwood trees smuggled

கோவையில் 20 ஆண்டுகள் பழமையான இரண்டு சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்றது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

கோவை குறிச்சி ஹவுஸிங் யூனிட் பகுதியில் நர்சரி பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட காலியிடம் ஒன்று உள்ளது. இந்த இடத்திற்கென பாதுகாவலர் யாரும் இல்லை. இங்கு சுமார் 20 ஆண்டுகள் பழமை வாய்ந்த இரண்டு சந்தன மரங்கள் இருந்தது.

Coimbatore sandalwood trees smuggled

இந்நிலையில் இன்று அதிகாலை அங்கு வந்த மர்ம நபர்கள் இரண்டு மரங்களையும் வெட்டி கடத்திச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் சுந்தராபுரம் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment