கோவை மாவட்டம் மாவுத்தம்பதி அடுத்த புதுப்பதி கிராமத்தில் ஒற்றைக் காட்டு யானை அடிக்கடி வந்து முகாமிடுவதால் அச்சத்தில் உள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Advertisment
கோவை மாவட்டம் மதுக்கரை வட்டம் மாவுத்தம்பதி ஊராட்சியில் புதுப்பதி என்ற கிராமம் உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய இந்த கிராமத்தின் அருகே உள்ள தோட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக, யானை முகாமிட்டு வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒற்றைக் காட்டு யானையால் அச்சமின்றி வெளியில் நடமாட முடியவில்லை எனவும், மேலும் இப்பகுதியில் உள்ள மக்கள் இயற்கை உபாதைகள் கழிக்க கூட மிகுந்த அச்சத்துடன் சென்று வரும் நிலை உள்ளதாகவும் கிராமத்தினர் கூறுகின்றனர்.
எனவே வனத்துறையினர் இந்த ஒற்றைக்காட்டு யானையை வனத்திற்குள் விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil