/indian-express-tamil/media/media_files/2025/06/19/coimbatore-ias-2025-06-19-11-39-35.jpg)
Coimbatore
கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் ஐ.ஏ.எஸ்., ஒரு முன்னோடி முயற்சியின் மூலம் பல மாணவர்களின் கல்லூரி கனவுகளை மீண்டும் உயிர்ப்பித்துள்ளார்.
12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றும் இதுவரை கல்லூரியில் சேராத மாணவர்கள், மற்றும் துரதிர்ஷ்டவசமாகத் தேர்ச்சி பெறாத மாணவர்கள் என அனைவரையும் கண்டறிந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் நேரடியாகத் தன் அலைபேசியில் அழைத்து உரையாடினார்.
கல்லூரிக் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததோடு மட்டுமல்லாமல், மாணவர்களுக்கு ஏற்படும் பொருளாதாரத் தடைகளைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான நிதி உதவிகளை வழங்கவும் உறுதியளித்துள்ளார்.
அதேபோல தேர்ச்சி பெறாத மாணவர்களைக் கைவிட்டு விடாமல், அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கும் விதமாக, 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வில் பங்கேற்கத் தேவையான அனைத்து உதவிகளையும் பள்ளிகளின் மூலம் செய்திட உத்தரவிட்டுள்ளார்.
மாணவர்கள் உயர்கல்வி தொடர எந்தத் தடையாக இருந்தாலும், அதை நிவர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக இருப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, துணி வணிகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் சுமார் 50 க்கும் மேற்பட்ட மாணவியர்கள் கலந்து கொண்டு, கல்வி உதவித்தொகை வேண்டி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விண்ணப்பங்களை அளித்தனர்.
பொருளாதாரச் சூழ்நிலை காரணமாகக் கல்லூரி கனவுகளைக் கைவிடும் நிலையிலிருக்கும் மாணவர்களுக்கு, கோவை மாவட்ட ஆட்சியரின் இந்த அசாத்திய முயற்சி ஒரு புதிய நம்பிக்கையின் ஒளியைப் பாய்ச்சியுள்ளது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.