பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து ஐந்து நாள் பரோலில் வெளிவந்திருக்கும் சசிகலா, வரும் 11-ஆம் தேதி வரை தி.நகர் ஹபிபுல்லா சாலையில் உள்ள இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணப்பிரியாவின் வீட்டில் தங்கவிருக்கிறார். இந்த ஐந்து நாட்கள் வெளியில் இருக்கும் வரையில், சசிகலா பின்பற்ற வேண்டி கர்நாடக சிறைத்துறை நிர்வாகம் விதித்துள்ள நிபந்தனைகள் குறித்து இங்கே பார்ப்போம்,
*வீட்டில் இருந்து மருத்துவமனை, மருத்துவமனையில் இருந்து வீடு தவிர, வேறு இடங்களுக்கு செல்லக்கூடாது.
* காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மருத்துவமனையில் இருக்க, சசிகலாவுக்கு அனுமதி.
* நள்ளிரவில் மிக அவசியமான சூழல் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் தகவல் தந்துவிட்டு செல்லலாம்.
* ஊடகங்களை சந்தித்து எந்த கருத்துக்களையும், சசிகலா தெரிவிக்கக்கூடாது என்றும் நிபந்தனை.
* பொது மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில், சசிகலா பங்கேற்கக்கூடாது.
* சசிகலா தாமாகவே, எந்த அரசியல்வாதியையும் அழைத்து சந்திக்கக்கூடாது, வீட்டுக்கு வருபவர்களை சந்திக்க தடையில்லை, என்று சசிகலாவுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Conditions for sasikala to be stay in chennai for 5days parole
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!