Corona Latest TN Reports: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
Advertisment
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4,829ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரசால் இன்று மேலும் 771 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4,829 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 3,275 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இன்று மேலும் 2 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்திலேயே அதிக அளவாக சென்னையில் இன்று 324 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு மொத்த கொரோனா பாதிப்பு 2,328 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக ஓரே நாளில் 13,411 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று 31 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர், மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,516-ஆக அதிகரித்துள்ளது.