Advertisment

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,000-ஐ கடந்தது

வைரஸ் தொற்று அதிகமாக உள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 19-ம் தேதி முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus daily report, covid-19 positive case today, today coronavirus case new record, கொரோனா வைரஸ், 2174 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று, coronavirus death rate, tamil nadu coronvirus report, latest corona virus news, கோவிட்-19, கொரோனா வைரஸ் தினசரி ரிப்போர், tamil nadu today tested covid-19 positive 2174, total covid-19 positive cross 50000, tamil nadu coronavirus update

coronavirus daily report, covid-19 positive case today, today coronavirus case new record, கொரோனா வைரஸ், 2174 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று, coronavirus death rate, tamil nadu coronvirus report, latest corona virus news, கோவிட்-19, கொரோனா வைரஸ் தினசரி ரிப்போர், tamil nadu today tested covid-19 positive 2174, total covid-19 positive cross 50000, tamil nadu coronavirus update

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2,174 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனா தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 50,000-ஐ தாண்டியுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழக அரசும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக உள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 19-ம் தேதி முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் சுகாதாரத்துறை மாநிலத்தில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,174 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக பதிவான கொரோனா தொற்று எண்ணிக்கையாகம அமைந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 79 கோவிட்-19 பரிசோதனை மையங்களில் இன்று அதிகபட்சமாக 24,621 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 7 லட்சத்து 37 ஆயிரத்து 787 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 48 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இவர்களில் 10 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 38 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். கொரோனாவால் இன்று 48 பேர் உயிரிழந்ததை அடுத்து கொரோனாவால் பலியோனோர் மொத்த எண்ணிக்கை 576 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,276 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 35,556 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஒரு புறம் அதிகரித்து வந்தாலும் மறுபுறம் கணிசமான அளவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தும் வருகின்றனர். தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 842 பெர் குணமடைந்து மருத்துமனையில் இருந்து வீடு திரும்பினர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27,624 ஆக உயர்ந்துள்ளது.

அதே போல, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,990 ஆக உள்ளது.

Tamil Nadu Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment