Advertisment

தமிழகத்தில் ஒரேநாளில் 5,879 பேருக்கு கொரோனா; பலி 4,000ஐ தாண்டியது

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 5,879 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கை 2,51,728 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனாவால் 99 பேர் உயிரிழந்தனர். மொத்த எண்ணிக்கை 4,074 ஆக அதிகரிப்பு.

author-image
WebDesk
New Update
coronavirus daily

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 5,879 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை பதிவான மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 2,51,728 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 99 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் மாநிலத்தில், கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,074 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தீவிர நடவக்கைகளை எடுத்து வருகிறது. தினசரி கொரோனா வைரஸ் பரிசோதனை, தொற்று எண்ணிக்கை, உயிரிழந்தோர் எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகிறது.

அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 5,879 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை பதிவான மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 2,51,728 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 99 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் மாநிலத்தில், கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,074 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 7,010 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,90,966 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளவர்கள் 56,738 பேர்கள் உள்ளனர் என்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் இன்று -1074 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து அதிகபட்சமாக காஞ்சிபுரம்-368, தேனி-327, செங்கல்பட்டு-314, திருவள்ளூர்-305, விருதுநகர்-286, தூத்துக்குடி-243, திருவண்ணாமலை -242, கோவை - 238, குமரி -198, வேலூர் -197, கடலூர்- 182, நெல்லை-181, தென்காசி- 178, தஞ்சை-167, மதுரை - 166, விழுப்புரம் - 158, திருச்சி-136, ராணிப்பேட்டை-116, புதுக்கோட்டை-91, திண்டுக்கல்-81, கிருஷ்ணகிரி-74, சிவகங்கை- 61, கள்ளக்குறிச்சி- 60, சேலம்- 51, திருவாரூர்-45, ராமநாதபுரம்-37, நாகை-37, நீலகிரி -36, திருப்பூர்-36, கரூர்-36, நாமக்கல்-32, அரியலூர்- 32, திருப்பத்தூர்- 22, பெரம்பலூர் -20, தர்மபுரி -9, ஈரோடு - 8 கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Chennai Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment