Advertisment

பேனா நினைவுச் சின்னம் : தமிழக அரசு பதில்தர உத்தரவு

மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக 42 மீட்டர் உயர பேனா நினைவுச்சின்னம் அமைக்க தடைக்கோரிய வழக்கில்

author-image
WebDesk
New Update
பேனா நினைவுச் சின்னம் : தமிழக அரசு பதில்தர உத்தரவு

மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக 42 மீட்டர் உயர பேனா நினைவுச்சின்னம் அமைக்க தடைக்கோரிய வழக்கில்

Advertisment

மாநில மற்றும் மத்திய அரசுகள், சென்னை மாநகராட்சி பதிலளிக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மெரினாவில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு அருகே வங்க கடலில் 360 மீட்டர் உயரத்தில் ரூ.80 கோடி செலவில் பேனா நினைவிடம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்க உள்ளது.

மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் இருந்து 650 மீட்டர் கடலில் பாலம் போன்று அமைத்து இந்த பேனா நினைவு சின்னம் கட்டப்பட உள்ளது.

கடலோர பகுதிகள் ஆமைகள் முட்டையிட்டு இனப்பெருக்கும் செய்யும் பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டுமானங்கள் மேற்கொள்வதால் ஆமைகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதுடன், கடல் வளமும் பாதிக்கப்படும் என்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் படி, நிபுணர் குழுவை அமைத்து விதிகளுக்கு மாறாக கட்டுப்பட்டுள்ள அனைத்து கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நினைவுச்சின்னம் அமைக்க தடைக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment