கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துள்ளானது. இந்த கோர விபத்தில் 80-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 4 பேர் பலியாகி உள்ளனர். 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisment
கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் உள்ளிட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பணிகளை கண்காணித்து வருகின்றனர்.
கடலூரில் விபத்து நடந்த இடத்தையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மருத்துவ தேவைகளை உடனுக்குடன் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil