கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. அந்தப் பள்ளியின்
கழிவறை அருகே இறந்த நிலையில் ஆண் சிசுவின் சடலம் ஒன்று கிடந்தது.
இதைப் பார்த்த பள்ளி நிர்வாகிகள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இந்தத் தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இதையடுத்து, இறந்த நிலையில் கிடந்த சிசுவின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வு பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பள்ளியில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவரே சிசுவின் தாயார் என்பது தெரியவந்தது.
அந்த மாணவியும் சகோதரன் உறவு கொண்ட 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர். இதனால் மாணவி கருவுற்றுள்ளார். இதை வீட்டார் உள்ளிட்ட யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு வலி எடுத்து குழந்தை பிறந்துள்ளது. இந்தக் குழந்தை இறந்தே பிறந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”