/tamil-ie/media/media_files/uploads/2022/07/CMRL-1-1.jpg)
சென்னை மெட்ரோ ரயிலில் கலாச்சார, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் (Express Photo)
சி.எம்.ஆர்.எல்., சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் நேரடி இசை நிகழ்ச்சிகள் நடத்த முடிவுசெய்துள்ளது. இந்த வார இறுதியில் நிகழ்ச்சிகள் தொடங்கி ஒரு மாதத்திற்கு நடக்கவிருக்கிறது.
மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த நிகழ்ச்சிகளை நடத்த சென்னை மெட்ரோ திட்டமிட்டுள்ளது.
தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் நேரடி இசை நிகழ்ச்சி ஜூலை 23-ம் தேதி உயர்நீதிமன்ற மெட்ரோ நிலையத்தில் தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து ஜூலை 30-ம் தேதி விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் டிப்போ மெட்ரோ வரையிலான ரயிலில் மற்றொரு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.
ஆகஸ்ட் மாதம், நான்கு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன - ஆகஸ்ட் 6 ஆம் தேதி கிண்டி மெட்ரோ, ஆகஸ்ட் 13 ஆம் தேதி திருமங்கலம் மெட்ரோ, ஆகஸ்ட் 20 ஆம் தேதி ஆலந்தூர் மற்றும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி விமான நிலையத்திலிருந்து சென்ட்ரல் மெட்ரோவிற்கு ஒரு மெட்ரோ ரயிலில் நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.
தற்போது, CMRL தனது சேவைகளைப் பயன்படுத்தி தினசரி சராசரியாக 1.8 லட்சம் பயணிகளின் வருகைக் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பதின் நோக்கம், அதிகபட்ச பயணிகளைப் பெறுவதே என சி.எம்.ஆர்.எல். கூறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.