வலுபெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்; செவ்வாய்க் கிழமை (அக்.28) தீவிர புயலாக மாறும்: வானிலை ஆய்வு மையம்

முன்னதாக, அக். 27-ஆம் தேதி புயலாக மாறும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அக். 28-ஆம் தேதி அது தீவிர புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அக். 27-ஆம் தேதி புயலாக மாறும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அக். 28-ஆம் தேதி அது தீவிர புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

author-image
abhisudha
New Update
Cyclone Montha Updates in Tamil

cyclone Montha| Bay of Bengal Cyclone| Tamil Nadu Rain Alert| Heavy Rain Chennai

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், அக்டோபர் 27-ஆம் தேதி புயலாகவும், அதைத் தொடர்ந்து அக்டோபர் 28-ஆம் தேதி தீவிர புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

முன்னதாக, அக். 27-ஆம் தேதியே புயலாக மாறும் எனக் கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் தீவிரம் குறித்து புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாழ்வு மண்டலத்தின் தற்போதைய நிலவரம்

நேற்று வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது.

தாழ்வு மண்டலம் மையம் கொண்ட பகுதிகள்:

சென்னைக்கு: கிழக்கு தென்கிழக்கே 990 கி.மீ. தொலைவில்.

விசாகப்பட்டினம்: தென்கிழக்கே 990 கி.மீ. தொலைவில்.

காக்கிநாடா: தென்கிழக்கே 1000 கி.மீ. தொலைவில்.

அந்தமான் நிக்கோபார் தீவுகள்: மேற்கு தென்மேற்கே சுமார் 420 கி.மீ. தொலைவில்.

Advertisment
Advertisements

'மோன்தா' புயலின் நகர்வு மற்றும் கரையை கடக்கும் விவரம்

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்திற்குள் (நாளைக்குள்) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகத் தீவிரமடையும்.

அக்டோபர் 27-ஆம் தேதி காலைக்குள்ளாக மத்திய மேற்கு வங்கக்கடலில் இது 'மோதா' (Modha) புயலாக வலுப்பெறும்.

புயல் தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, அக்டோபர் 28-ஆம் தேதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஆந்திராவில் உள்ள மச்சிலிப்பட்டினம் மற்றும் விசாகப்பட்டினத்திற்கு இடையே, காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை: ஆரஞ்சு அலர்ட் அறிவிப்பு

இந்த புயலின் எதிரொலியாக, வடதமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும்.

ஆரஞ்சு அலர்ட்: கனமழையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, புயல் கரையை கடக்கக்கூடிய நாளான அக்டோபர் 27-ஆம் தேதி வடதமிழகப் பகுதிகளுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் 26-ஆம் தேதியும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கூறுகையில், "அக்டோபர் 27, 28 ஆகிய தேதிகளில் வடகோடி மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பரவலாக மழைப்பொழிவு உறுதி செய்யப்பட்டுள்ளது," என்று தெரிவித்துள்ளார்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளதால், கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் உடனடியாகக் கரை திரும்புமாறு சென்னை மண்டல கடலோர காவல்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

திருவள்ளூர், சென்னை, கடலூர், புதுச்சேரி, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்கவும், ஆழ்கடல் மீன்பிடிப் பணியில் ஈடுபட்டுள்ளோர் உடனடியாகக் கரை திரும்பவும் கடலோர காவல்படை அறிவுறுத்தி உள்ளது.

Chennai Rains

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: