குஜராத் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்துகொண்டார்.
இது தொடர்பாக பேசிய முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், “அவர் (ஓபிஎஸ்)அழைப்பின் பேரில் சென்றாரா என்பது கூட தெரியாது.
அவர் தன் நிலையில் இருந்து மாறிக்கொண்டே இருக்கிறார். சட்டப்பேரவையில் கருணாநிதியை புகழ்ந்து பேசுகிறார். அதேபோல் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக நடக்கிறார்” என்றார்.
தொடர்ந்து நான் மட்டுமல்ல கட்சிக்காரர் என அனைவரும் கூறுகின்றனர். அவர் சினிமா சென்றால் ஆஸ்கார் வெல்வார். நடிகர் சிவாஜியை முந்திவிடுவார்.
மேலும் பாஜக ஏற்கனவே சில விஷயங்களை தெளிவாக கூறிவிட்டனர். பாஜக அவருக்கு எந்த உதவியும் செய்யாது. அவர் முழு சந்திர முகியாக மாறிவிட்டார். அவரின் அரசியல் என்பது பூஜ்யம்தான்” என்றார்.
தொடர்ந்து, அதிமுக உள்கட்சி வழக்கு குறித்து பேசுகையில், “உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. அந்த வழக்கில் நாங்கள் வெற்றி பெறுவோம்” என்றார்.
மேலும், ஓ.பன்னீர் செல்வம் உள்ளார்த்தமாக திமுகவை கண்டிக்க வேண்டும். மகனை விட்டு மு.க. ஸ்டாலினை புகழச் செய்தவர்தான் இந்த ஓபிஎஸ். இதுவரை அவர் ஏதாவது ஆர்ப்பாட்டமாவது நடத்தியிருக்கிறாரா? எனவும் டி.ஜெயக்குமார் கேள்வியெழுப்பினார்.
இதற்கிடையில், குஜராத் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் ஒ.பன்னீர் செல்வம் காவி துண்டு அணிந்ததும் பேசுபொருளாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/