Advertisment

டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் 40-பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்: தமிழக அரசு வெளியிட்ட பட்டியல்

அக்டோபர் 9-ம் தேதி வரையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 40 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு தகவல்

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Dengue fever, CM Edappadi Palanisamy, Tamilnadu Government, Dengue Fever,

தமிழகத்தில் அக்டோபர் 9-ம் தேதி வரையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 40 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

பூச்சிகளால் பரவும் நோய் தொடர்பாக தமிழக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் அக்டோபர் 9-ம் தேதி வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 40 -பேர் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்,11,744 பாதிக்கப்பட்டுள்ளனர்.

மலேரியாவால் 8,524 பேரும், ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் 64 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிக்கன்குனியாவால் 85 பேர், லெப்டோபைரஸிஸ் (எலிக்காய்ச்சல்) நோய்க்கு 799 பேர், ஸ்க்ரப்டைபஸ் நோய்க்கு 216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெறிநாய்க்கடியால் 13-பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 13 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை, மலேரியா, மூளைக்காய்ச்சல், சிக்கன்குனியா போன்றவற்றினால் உயிரிழப்பு ஏற்படவில்லை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dengue fever, CM Edappadi Palanisamy, Tamilnadu Government, Dengue Fever,

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment