தமிழகத்தில் அக்டோபர் 9-ம் தேதி வரையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 40 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பூச்சிகளால் பரவும் நோய் தொடர்பாக தமிழக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் அக்டோபர் 9-ம் தேதி வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 40 -பேர் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்,11,744 பாதிக்கப்பட்டுள்ளனர்.
மலேரியாவால் 8,524 பேரும், ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் 64 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிக்கன்குனியாவால் 85 பேர், லெப்டோபைரஸிஸ் (எலிக்காய்ச்சல்) நோய்க்கு 799 பேர், ஸ்க்ரப்டைபஸ் நோய்க்கு 216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெறிநாய்க்கடியால் 13-பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 13 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை, மலேரியா, மூளைக்காய்ச்சல், சிக்கன்குனியா போன்றவற்றினால் உயிரிழப்பு ஏற்படவில்லை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.