ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், அழகிரி மகன் தயாநிதி அழகிரி, வைகோவை ட்விட்டரில் கேலி செய்திருக்கிறார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திமுகவுக்கு ஆதரவு அளித்திருந்தார். ஆர்.கே.நகரில் திமுகவின் பிரச்சார பொதுக்கூட்டத்திலும் வைகோ பங்கேற்றார்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில், திமுக வேட்பாளர் மருது கணேஷ், மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில், திமுகவின் தேர்தல் தோல்விக்கு வைகோதான் காரணம் என்பதை குறிக்குமாறு, தயாநிதி அழகிரி தன் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
December 2017
அதேபோல், தன்னுடைய மற்றொரு பதிவில், ‘துரோகம் என்றுமே வெற்றி பெறாது”, என்றும் பதிவிட்டுள்ளார்.
December 2017