தீபாவளி இந்த ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை (ஜூலை 12) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
இந்த டிக்கெட்களை ரயில்வே நிலையங்கள், ஐஆர்சிடிசி செயலி வாயிலாகவும் முன்பதிவு செய்துக்கொள்ளலாம்.
மேலும் நாளை முன்பதிவு நவம்பர் 9ஆம் தேதி பயணத்துக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து, ஜூலை 13ந் தேதி முன்பதிவு செய்தால் நவம்பர் 10ஆம் தேதிக்கும், 14ஆம் தேதி முன்பதிவு நவம்பர் 11ஆம் தேதிக்கும், 15ஆம் தேதி நவம்பர் 12ஆம் தேதிக்கும் பயணிக்கலாம்.
இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வருவதால் வியாழக்கிழமை முதலே பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படும் எனத் தெரிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“