சிவகங்கை நகர்மன்ற கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு நன்றி தெரிவித்ததற்கு கூட்டணி கட்சியான தி.மு.க உறுப்பினர்களும் எதிர்கட்சியான அ.தி.மு.க உறுப்பினர்களும் ஒன்றாக எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் நகர்மன்றத் தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. சிவகங்கை நகர்மன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் நகர் மன்ற உறுப்பினர் மகேஷ் மற்றும் விஜயகுமார் இருவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது எம்பி நிதியிலிருந்து சிவகங்கை மகளிர் மேல்நிலை பள்ளிக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் என்று தெரிவித்தனர்.
அப்போது, திமுக நகர்மன்ற உறுப்பினர் ஜெயகாந்தன் எழுந்து ப.சிதம்பரம்,
எம்.பி நிதியில் இருந்து சிவகங்கை நகருக்கு நிதி ஒதுக்கீடு செய்த ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு நகர்மன்ற கூட்டத்தில் நன்றி தெரிவிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் முயன்றனர். அப்போது, ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் குறித்து பெருமை பேசக்கூடாது என திமுக நகர்மன்ற உறுப்பினர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, அவருடன் இணைந்து அதிமுக நகர மன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சிவகங்கை நகர்மன்ற கூட்டத்தில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் பற்றி பேசுவதற்கு அதிமுக நகர் மன்ற உறுப்பினர் ராஜா
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil