உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி பத்து மாதங்களுக்கு பிறகு தொண்டர்களை சந்திக்க உள்ளதாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்திக் குறிப்பில், திமுக தலைவர் கருணாநிதிக்கு வரும் ஜூன் 3-ஆம் தேதி 94-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது. சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கும் இந்த வைர விழாவில், கருணாநிதி தொண்டர்களை நேரில் சந்திக்க உள்ளதாக திமுக செய்தித் தொடர்பாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விழாவில் பீகார், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களும் பங்கேற்க உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களுக்கு பிறகு தற்போது கருணாநிதி தொண்டர்களை சந்திக்க உள்ளார். கருணாநிதியின் வைரவிழாவில் கலந்து கொள்ள பல்வேறு முக்கிய தலைவர்களை சந்தித்து திமுக எம்.பி., கனிமொழி நேரில் அழைப்பு விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.