Advertisment

நல்ல நேரம் பார்த்து பதவியேற்றாரா உதயநிதி? எம்.பி. செந்தில் குமார் பதில்

உதயநிதி அமைச்சராக நல்ல நேரம் பார்த்து பதவியேற்றாரா என்பது குறித்து தர்மபுரி திமுக எம்.பி. செந்தில் குமார் பதிலளித்தார்.

author-image
WebDesk
New Update
நல்ல நேரம் பார்த்து பதவியேற்றாரா உதயநிதி? எம்.பி. செந்தில் குமார் பதில்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகனும் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி அண்மையில் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அப்போது, இறைமறுப்பு மற்றும் திராவிட கொள்கையில் இருந்து வந்த அவர், நல்ல நேரம் பார்த்து அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் என்ற செய்திகள் வெளியாகின.

Advertisment

இந்த நிலையில் தனியார் சேனல் ஒன்றுக்கு திமுக எம்.பி., செந்தில் குமார் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நெறியாளர், உதயநிதி நல்ல நேரம் பார்த்து அமைச்சராக பொறுப்பேற்றுள்ளாரா எனக் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த செந்தில் குமார், “இதற்கு நான் என்ன பதில் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

உதயநிதி அவரது மனைவி ஆகியோர் இறை மறுப்பாளர்கள் எனக் கூறியுள்ளனர். எனக்கு நல்ல நேரம் போன்றவை தெரியாது.

அப்படி அவங்க செய்து இருந்தா, அவர்களிடம் போய் கேளுங்கள்” என்றார்.

தொடர்ந்து, “நல்ல நேரம் பார்க்கக் கூடாது, அதை நொறுக்கிட்டு பண்ணணும்” என்றார். அதாவது, வேறு யாராவது என்னிடம் நல்ல நேரம் என்று சொன்னால் நான் அதை எதிர்த்து செய்வேன்” என்றார்.

மேலும், “என் கட்சியில் கூட நான் சில விஷயங்களை சொல்ல முடியவில்லை. எனக்கு தெரிந்து கிடைக்கும் இடமெல்லாம் நமது கொள்கையில் வலிமையாக இருக்க வேண்டும்” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment