Advertisment

பிரதமர் வெட்கி தலைகுனிய வேண்டும்: கனிமொழி எம்.பி. ஆவேசம்

மணிப்பூரில் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மேடி பதில் சொல்லியே ஆக வேண்டும் என திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கூறினார்.

author-image
WebDesk
New Update
கனிமொழி

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெறும் மணிப்பூரில் இரு பிரிவினர் இடையே இடஒதுக்கீடு விவகாரத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து இருவரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.

இந்த மோதல் வன்முறை வெறியாட்டமாக மாறியது. இந்த வன்முறை வெறியாட்டத்தின் உச்சமாக இரு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர்.

Advertisment

இது தொடர்பான காணொலிகள் வெளியாகி நாடு முழுக்க கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த நிலையில், திமுக மகளிர் அணி கனிமொழி தலைமையில் இன்று சென்னை வள்ளூவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய கனிமொழி, “உலகத்தையே உலுக்கும் அளவுக்கு மணிப்பூரில் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் பிரதமர் மோடி, மணிப்பூர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

மணிப்பூரில் வன்முறையைத் தடுக்க பாஜக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அப்பாவி பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், பிரதமர் மோடி என்ன செய்து கொண்டு இருக்கிறார்” என ஆவேசமாகப் பேசினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Manipur Kanimozhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment