/tamil-ie/media/media_files/uploads/2023/07/ed12.jpg)
.எப்.ஐ அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
சென்னையில், பி.எப்.ஐ அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
நேற்று தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா முன்னாள் மாநிலத் தலைவர் மொஹமத் இஸ்மயில் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்தனர்.
இந்நிலையில் சென்னை, பெரியமேடு பகுதியில் உள்ள அவரது வீட்டிலும், அவர் நடத்தி வந்த மாத இதழின் அலுவகத்திலும் சோதனை நடைபெற்றது. இந்நிலையில் சோதனை ஏன் நடத்தப்படுகிறது என்று அமலாக்கத்துறை இதுவரை தகவல் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனை நடைபெறுவதாக வந்த தகவல் அடிப்படையில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இஸ்மாயில் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் அவர் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.