Advertisment

"ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் செய்துள்ளார்": செந்தில் பாலாஜியை குற்றம் சாட்டிய ஈ.பி.எஸ்.,

"2 ஆண்டுகளில் ரூ.30,000 கோடிக்கு மேல் ஊழல் செய்துள்ளார் செந்தில்பாலாஜி" - எடப்பாடி பழனிசாமி

author-image
WebDesk
New Update
eps, mk stalin

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதைப்பற்றி அதிமுகவை குற்றம் சாட்டியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Advertisment

இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளதாவது:

"செந்தில் பாலாஜி விவகாரத்தில் அ.தி.மு.க.வையும் என்னையும் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையிடம் ஏதாவது சொல்லிவிட்டால் தனக்கு பாதிப்பு என அஞ்சுகிறார் முதலமைச்சர்.

முந்தைய ரெய்டுகளின்போது மு.க.ஸ்டாலின் மௌனம் காத்தது ஏன்? மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதுபோல் நாடகமாடுகிறார் செந்தில் பாலாஜி. 2 ஆண்டுகளில் ரூ.30,000 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் செய்துள்ளார் செந்தில் பாலாஜி", என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Eps V Senthil Balaji
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment