Advertisment

அரசு நிகழ்ச்சிகளில் எதிர்க்கட்சியினரை புறக்கணிக்கும் எண்ணம் இல்லை: முதல்வர்

Edappadi Palanichami : இ - பாஸ் இருப்பதால்தான் கொரோனா பரவல் இந்த அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது

author-image
WebDesk
New Update
Edappadi palanichami, corona virus, tamilnadu, e-pass, madurai, second capital. h.raja, M.K.Stalin, review meetings, expalanation, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil

தமிழகத்திற்கு இரண்டாவது தலைநகரம் என்பது அமைச்சர்களின் கருத்தேயன்றி, அரசின் கருத்து அல்ல. அரசால் நிறைவேற்ற முடிந்த கோரிக்கைகளை நிறைவேற்றி வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisment

நாமக்கல்லில் மாவட்டத்தில் வளர்ச்சிப்பணி, கொரோனா தடுப்புப்பணிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்தார். பின், பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, மதுரையை 2வது தலைநகராக்க வேண்டும் என்பது உதயக்குமார் கருத்து. அரசின் கருத்து அல்ல. நானும்தான் மத்திய அரசுக்கு பல கோரிக்கைகள் வைக்கிறேன். எல்லாவற்றையும் நிறைவேற்றுகிறார்களா? எதை நிறைவேற்ற முடியுமோ அதைத்தான் நிறைவேற்ற முடியும்.

ஹெச்.ராஜாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் நேற்றே காட்டமான பதிலை அளித்துவிட்டார். விலைமதிப்பில்லாத உயிரை அரசு காப்பாற்றிக்கொண்டிருக்கிறோம். அதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் அதில் பங்கு உள்ளது.

இபாஸ் எதற்கு என்று எல்லோரும் கேட்கிறார்கள். ஒருவர் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றால் அங்கு அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவரை எப்படி கண்டறிய முடியும். இபாஸ் இருப்பதால்தான் கொரோனா பரவல் இந்த அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.

தர்மபுரி எம்பி போராட்டம் : தர்மபுரியில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்திற்கு சென்று முதல்வரிடம் மனு கொடுப்பதாக இருந்த தர்மபுரி தொகுதி திமுக எம்பி செந்தில்குமார், போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனையடுத்து, எம்பி செந்தில்குமார், திமுகவினருடன் சேர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

ஸ்டாலின் கேள்வி : மக்களின் பாதிப்புகளை மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்காமல், முதல்வர் பழனிசாமி, யாரிடம் கேட்க மாவட்டங்களுக்கு போகிறார்? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.அரசு ஆய்வு கூட்டங்களுக்கு திமுக எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை அழைக்க வேண்டும். மக்களின் குறைகளை எடுத்துரைத்து தீர்வுகாண வழிவகை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஸ்டாலின் கேள்விக்கு பதில் : தன் தலைமையில் நடக்கும் யாரையும் ஆய்வுக்கூட்டங்களில் புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. கொரோனா பரிசோதனை செய்யாவதர்களை அரசு விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை. கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தால் மக்கள் பிரதிநிதிகள் யார் வேண்டுமேனாலும் பங்கேற்கலாம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment