சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட சூரப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி அதிமுக கொடியை ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாத மு.க. ஸ்டாலின், பீகார் சென்று பிரதமர் வேட்பாளரை உருவாக்க போகிறாராம்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் 52 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. நாங்கள் 4 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி செய்தோம்.
எவர் மீதும் வழக்குப் போடவில்லை. ஆனால் தற்போது எடுத்ததெற்கெல்லாம் வழக்கு போடுகிறார்கள். செந்தில் பாலாஜி வாக்குமூலம் கொடுத்தால் பலர் சிக்குவார்கள்.
மதுபான பார்கள் விவகாரத்தில் நாளொன்றுக்கு ரூ.10 கோடிகள் வீதம் ஆண்டுக்கு ரூ.3500 கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“