எம்எல்ஏ-க்களிடம் குதிரை பேரம் விவகாரம்... சரவணனிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது: ஓபிஎஸ் தகவல்

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
O Panneerselvam

மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணனிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Advertisment

ஜெயலலிதா மறைவையடுத்து தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. முதலமைச்சராக இருந்த ஓ பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, தான் முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டேன் என பகீர் பேட்டி அளித்தார் பன்னீர் செல்வம்.

இதையடுத்து, அதிமுக இரண்டு அணிகளாக பிளவுபட்டது. அப்போது, சசிகலா தரப்பினர் எம்எல்ஏ-க்களை கூவத்தூர் விடுதிக்கு கொண்டு சென்றனர்.விடுதியில் இருந்த எம்எல்ஏ-க்கள் சிலர் ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்து வெளிவந்தனர். அந்த சமயத்தில் மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசியது தொடர்பான வீடியோ நேற்று வெளியானது. அதில், எம்எல்ஏ-க்களிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டது என்று அவர் அந்த வீடியோவில் கூறியதாக தெரிகிறது. ஆனால், அவ்வாறு நான் பேசவில்லை என சரவணன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சட்டமன்ற உறுப்பினர் சரவணனிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Advertisment
Advertisements
Koovathur Sasikala

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: