முக்கிய பிரமுகர்கள் வருகை தரும்போது, தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற சுற்றறிக்கையை மின்வாரியம் தரப்பில் இருந்து, வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மத்திய அமைச்சர் அமித்ஷா வேலூரில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழகம் வந்திருந்தார். இந்நிலையில் அவர் சென்னைக்கு வந்தபோது, சிறிது நேரம் மின்சாரம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இதை கண்டித்து பாஜக தொண்டர்கள் போராட்டம் செய்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘மின்சாரம் நிறுத்தப்பட்டதை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை என்றும் இதுபோன்று இனி வரும் காலங்களில் நடைபெறாமல் பார்த்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.
இந்நிலையில் முக்கிய பிரமுகர்கள் வருகையின்போது, தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற சுற்றறிக்கையை மின்வாரியம் தரப்பில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.
முக்கிய பிரமுகர்கள் வருகையின்போதும், அரசு நிகழ்வுகளின் போதும் மின்வாரிய அதிகாரிகள் நிகழ்வு இடத்திற்குச் சென்று, ஆய்வு செய்ய வேண்டும் . மின்சாரம் இல்லை என்றால் அதற்கான மாற்று ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இதுபோன்று முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் இடங்களில் மின்வாரிய ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டும்’ என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“