/tamil-ie/media/media_files/uploads/2023/06/vari.jpg)
மதுரை வரிச்சியூர் செல்வம் கைது
மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை விருதுநகர் காவல்துறை கொலை வழக்கில் கைது செய்துள்ளது.
விருதுநகரைச் சேர்ந்த முருக லட்சுமி என்பவர் வரிச்சூர் செல்வத்தின் கூட்டாளியான தனது கணவர் செந்திலை காணவில்லை என விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் கடந்த 2021ம் ஆண்டு புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரை தேடி வந்தனர். செந்திலின் செல்போனுக்கு கடைசியாக வந்த அழைப்புகளை வைத்து இந்த வழக்கை விசாரணை செய்தனர்.
இந்நிலையில் அவருடைய கடைசி அழைப்புகளை கண்டறிந்தனர். அவர் வரிச்சூர் செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகளை தொடர்பு கொண்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அருப்புக்கோட்டை ஏஎஸ்பி வருண்காரன் தலைமையில் காவல்துறையினர் மதுரையில் வரிச்சூர் செல்வத்தை பிடித்தனர்.
இந்நிலையில் செந்திலை, சென்னையில் வைத்து வரிச்சியூர் செல்வம் மற்றும் கூட்டளிகளும் கொன்றதாக விசாரணையில் ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வரிச்சியூர் செல்வத்தை சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.