சேர்வலாறு அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்க விவசயியாகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆற்று நீர், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயகளின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. இந்நிலையில், அம்மாவட்டத்தின் சேர்வலாறு அணையில் இருந்து தண்ணீர் வீணாக தாமிரபரணி ஆற்றில் செல்வதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
அணையின் ஷட்டர் பழுதை தற்போது பொதுபணித்துறை சரிசெய்து வருவதால் அணையில் இருந்து தண்ணீர் வீணாக செல்வதாக குறிப்பிட்ட பொதுமக்கள், பொதுபணித்துறையினர் பராமரிப்பு பணிகளை உரிய காலத்தில் மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் தண்ணீர் வீணாவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வரும் இத்தகைய சூழலில், சேர்வலாறு அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வீணாக செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Farmers requests to action against water waste from seravlaru dam
ஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன?
சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை
கடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
இணையத்தில் வைரலாகும் ”குக் வித் கோமாளி” சிவாங்கி, புகழ் வீடியோ
முதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்