எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 4 வாரங்களில் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்தாண்டு ஜனவரி மாதம் 28 ஆம் தேதி சென்னை கடல் பகுதியில் டான் காஞ்சிபுரம் மற்றும் மேபில் என்ற இரண்டு கப்பல்கள் மோதி விபத்து ஏற்பட்டது. கப்பல்களில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கசிந்ததையடுத்து கடல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்படைந்தது. இதன் காரணமாக வாழ்வாதாரம் பாதிப்படைந்த மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, பாதிப்படைந்த மீனவர்களுக்கு இழப்பீடாக 240 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என இரண்டு கப்பல் நிறுவனங்களுக்கும் தமிழக அரசு கோரியிருந்தது.
இந்நிலையில், இழப்பீடு தொகை வழங்குவது தொடர்பாக இரண்டு கப்பல் நிறுவனங்களும் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, காமராஜர் துறைமுகத்தில் நிறுத்திவைக்கபட்டான. இரு கப்பல் நிறுவனங்களும் சமரசமாக பேசி இழப்பீடு தொகையாக 141 கோடி ரூபாயை அரசிடம் வழங்க ஒப்புக்கொண்டாது.
இந்நிலையில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரி மீனவர் சங்கத்தை சார்ந்த செல்வராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், பவானி சுப்புராயன் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது மீன் வளத்துறை செயலாளர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யபட்டது. அதில் எண்ணை கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக மீன் வளத்துறை கூடுதல் இயக்குனர் தலைமையில் 6 பேர் அடங்கிய குழு அமைக்கபட்டதாகவும், அந்த குழு பாதிக்கப்பட்ட பகுதிகள், மீனவர் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. அந்த அறிக்கையின் படி பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க தேவையான நடவடிக்கைகள் அரசு எடுத்து வருவதாகவும். இதன்படி பாதிக்கப்பட்ட மீனவர்களின் வங்கி கணக்குகள், ஆதார் அடையாள அட்டை உள்ளிட்ட விபரங்களை சேகரித்து வருவதாகவும் இந்த பணிகள் விரைவில் முடிவடைந்த பிறகு உண்மையாக பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு விரைவாக இழப்பீடு வழங்கபடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.