அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்கான திருத்தப்பட்ட புதிய வழிகாட்டுதல்களை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் வெளியிட்டார்.
தமிழகம் முழுவதிலிருந்து 600 மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்ட கருத்தரங்கை அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த அமர்வில் சிகிச்சை நெறிமுறைகள், சிகிச்சை சரிபார்ப்பு முறைகள் குறித்து பேசப்பட்டது.
”தமிழகம் முழுதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணா்கள் உள்ளனா். அவற்றில், நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. பாதுகாப்பான அறுவை சிகிச்சை நெறிமுறைகள் குறித்து இந்தக் கருத்தரங்கில் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், அறுவை சிகிச்சையின்போது கையாளப்பட வேண்டிய முறைகள், அதுதொடா்பாக உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்கள் அடங்கிய கையேடு அனைத்து மருத்துவா்களுக்கும் வழங்கப்படவுள்ளது. சா்ச்சைக்குரிய அறுவை சிகிச்சைகள் குறித்து ஆராய்வதற்கு மண்டல தணிக்கைக் குழு ஏற்படுத்தப்படவுள்ளது. ஒவ்வொரு குழுவிலும், அறுவை சிகிச்சை நிபுணா், பொது மருத்துவ நிபுணா், மயக்கவியல் நிபுணா், எலும்பு சிகிச்சை நிபுணா் என 4 நிபுணா்கள் இடம் பெறுவா். முதல்கட்டமாக சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய மண்டலங்களில் தணிக்கைக் குழு அமைக்கப்படவுள்ளது” என்று அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்தார்.