Advertisment

அந்நிய முதலீடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் மனு மீது ஜூலை 28-ல் விசாரணை

அந்நிய முதலீடு வழக்கில், சிபிஐ அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரிய கார்த்தி சிதம்பரத்தின் மனு மீதான விசாரணையை சென்னை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
அந்நிய முதலீடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் மனு மீது ஜூலை 28-ல் விசாரணை

அந்நிய முதலீடு பெற உதவிய குற்றச்சாட்டில், சிபிஐ அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரிய கார்த்தி சிதம்பரத்தின் மனு மீதான விசாரணையை வருகிற 28-ம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது மும்பையில் உள்ள ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு மொரீஷியஸ் நாட்டிலிருந்து ரூ.4.62 கோடி முதலீட்டை பெற கடந்த 2008-ஆம் ஆண்டு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்தது. ஆனால் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் சட்ட விரோதமாக ரூ.305 கோடி நேரடி அந்நிய முதலீட்டை அந்நிறுவனம் பெற்றதாக புகார் எழுந்தது. மேலும், தன் தந்தை ப.சிதம்பரத்தின் பதவியை தவறாக பயன்படுத்தி ஐ.என்.எக்ஸ் நிறுவனத்திற்கு உதவியதாக கார்த்தி சிதம்பரம் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதனையடுத்து, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 16-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறுகையில், "மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் நடத்தி வந்த ‘ஐ.என்.எக்ஸ்., மீடியா’ என்ற தொலைக்காட்சி நிறுவனம், விதிமுறைகளை மீறி ரூ.305 கோடிக்கு தனது பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று, நேரடி அந்நிய முதலீட்டை பெற்றுள்ளது. இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவி செய்துள்ளார். இதன்மூலம் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்கள் பயன் அடைந்துள்ளன என்ற குற்றச்சாட்டின் பேரில் சோதனை நடத்தப்பட்டதாக" தெரிவித்தனர். கார்த்தி சிதம்பரத்தின் மீது 5 பிரிவுகளில் அவர்கள் வழக்கும் பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து அமலாக்கத் துறையும் கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் இன்று ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இதனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு அளித்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் தன் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் தன் மீது பொய்யாக இந்த வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளதாக கார்த்தி சிதம்பரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ டெல்லியில் வழக்கு பதிவு செய்துள்ளதால், சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ள அதிகாரம் உள்ளதா" என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கில் உத்தரவிட சென்னை உயர் நீதின்றத்திற்கு அதிகாரம் உள்ளது என கார்த்திக் சிதம்பரம் சார்பில் ஆஜாரன மூத்த வக்கீல் கோபால் சுப்பிரமணியம் வாதிட்டார். அதனையடுத்து, வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை வருகிற 28-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Cbi P Chidambaram Karti Chidambaram Inx Media
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment