தமிழ்நாட்டின் மாநில தலைமை தகவல் ஆணையராகப் பணியாற்றிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆர்.ராஜகோபால் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) செயற்பாட்டாளர் எம்.வி. மாலைராஜா ஆகியோர், ஞாயிற்றுக்கிழமை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
Advertisment
இதுகுறித்து அழகிரி கூறுகையில், ராஜகோபால் ஒரு நிர்வாகியாக சிறப்பான பணியை கொண்டிருந்தவர், முன்னாள் காங்கிரஸ் தலைவரும் பிரதமருமான ராஜீவ் காந்தியுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தவர். மாலைராஜா தனது வாழ்நாள் முழுவதும் விளிம்புநிலை மக்களுக்காக உழைத்தவர். நாங்கள் இருவரையும் கட்சிக்குள் வரவேற்கிறோம், என்றார்.
மேலும் புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இல்லத்திற்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதை விமர்சித்த அழகிரி, போலீசார் அவரைப் பாதுகாக்க முயற்சிக்கிறார்களா அல்லது அவருக்கு இடையூறு விளைவிக்கிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றார்.
இந்திய ஜனநாயகத்தின் நிலையைப் பற்றி பேச வெளிநாட்டில் உள்ள புகழ்பெற்ற கல்லூரிகளால் ராகுல் காந்தி அழைக்கப்பட்டார்.
ஜனநாயக மரபுகள் குறித்தும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் எப்படி முடக்கப்படுகிறது என்பது குறித்தும் பேசினார். இது எப்படி தவறாகும்? ஜனநாயகத்திற்கு எதிராக பேசுவது மட்டுமே தவறு. ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் மரபுகள் பின்பற்றப்படவில்லை என்று கூறுவதில் தவறில்லை, என்றார்.
வைக்கம் 100வது ஆண்டு போராட்டத்தை கேரள காங்கிரஸ் பிரிவும், தமிழ்நாடு காங்கிரஸும் இணைந்து நினைவு கூறும் என்று அழகிரி கூறினார்.
இதற்காக ஈரோடு (கிழக்கு) எம்.எல்.ஏ., ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர் தனது ஆதரவாளர்களுடன் மார்ச் 28ஆம் தேதி கேரளாவில் உள்ள வைக்கம் நகருக்கு நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று அழகிரி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“