Advertisment

கூடுவாஞ்சேரி- மகேந்திரா சிட்டி 8 வழிச் சாலை: ஜரூராக தொடங்கிய பணிகள்; எப்போது முடியும்?

போக்குவரத்து நெரிசலின் காரணமாக தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு வரை கட்டப்பட்ட நான்குவழி சாலையை எட்டு வழி சாலையாக மாற்றுவது அவசியம் என்று கருதுகின்றனர்.

author-image
Janani Nagarajan
May 18, 2022 22:28 IST
கூடுவாஞ்சேரி- மகேந்திரா சிட்டி 8 வழிச் சாலை: ஜரூராக தொடங்கிய பணிகள்; எப்போது முடியும்?

கூடுவாஞ்சேரி-செட்டிபுணியம் ஜி.எஸ்.டி

கூடுவாஞ்சேரி-செட்டிபுண்ணியம் இடையே அமைக்கப்பட்டிருக்கும் ஜி.எஸ்.டி. சாலையை, எட்டு வழிச்சாலையாக மாற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது. போக்குவரத்து நெரிசலின் காரணமாக தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு வரை கட்டப்பட்ட நான்குவழி சாலையை எட்டு வழி சாலையாக மாற்றுவது அவசியம் என்று கருதுகின்றனர்.

Advertisment

கூடுவாஞ்சேரியிலிருந்து செட்டிபுண்ணியம் மஹிந்திரா சிட்டி வரை அமைக்கப்பட்டிருக்கும் 13.5 கி.மீ. நீளமுள்ள கிராண்ட் சதர்ன் டிரங்க் (ஜி.எஸ்.டி.) சாலையில் எட்டுவழிச்சாலை கட்டத்தொடங்கி 25 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மாநில அரசின் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கான பணிகள் கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது.

"தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு வரை அமைக்கப்பட்டிருக்கும் பிரத்யேக சாலைக்கு வசதியாக, நான்கு வழி ஜி.எஸ்.டி. சாலையை (தாம்பரம்-திருச்சி NH-45) எட்டு வழிச்சாலையாக விரிவுபடுத்தவேண்டும். இது செய்யாவிட்டால், தனிப்பயனாக்கப்பட்ட சாலை உபயோகமற்றதாக மாறி விடும். 

ஒரு நாளுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் செல்லும் சாலையாக இருப்பதால், உயர்த்தப்பட்ட சாலைப் பணியை மேற்கொள்வதற்கு முன், எட்டு வழிச்சாலையாக விரிவுபடுத்த வேண்டியது அவசியம்" என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு வரை இருக்கும் ஜி.எஸ்.டி. சாலையின் இருபுறமும் கனரக வாகனங்களுக்காக பிரிக்கப்பட்ட வழி சுமார் 2.5-5 மீட்டராக இருக்கிறது. சாலையின் அகலம் 35-45 மீட்டராக இருக்கின்ற பட்சத்தில்,  இருபுறமும் மேற்கொண்டு இரண்டு பாதைகள் அமைப்பதின் மூலமாக ஒரு நாளைக்கு சுமார் 10,000 வாகனங்கள் கடந்து செல்வதற்கான இடத்தை உருவாக்க முடியும். 

ஜிஎஸ்டி சாலைக்குள் நுழையும் இடங்களில் வாகனத்தின் வேகம் மணிக்கு 25-30 கிலோமீட்டராக குறையும் போது, ​​போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வண்டலூரில் இருந்து செட்டிபுண்ணியம் வரையிலான ஜிஎஸ்டி சாலையை விரிவுபடுத்துவதற்காக, அரசு ரூ. 275.17 கோடியை தேசிய நெடுஞ்சாலை பிரிவுக்கு வழங்கியுள்ளது.  முதற்கட்டமாக, வண்டலூரிலிருந்து கூடுவாஞ்சேரி வரை இருக்கும் 5.3 கிலோமீட்டர் ஜி.எஸ்.டி. சாலையை எட்டு வழி சாலையாக மாற்றி, கனரக வாகனங்கள் செல்லும் பாதையுடன் இணைக்கவுள்ளனர்.

 கூடுவாஞ்சேரி மற்றும் செட்டிபுண்ணியம் இடையேயான 13.5 கி.மீ சாலையை அகலப்படுத்தும் பணி, கூடுவாஞ்சேரிலிருந்து மறைமலைநகர் வரை செல்லும் சாலை உட்பட மூன்று கட்டங்களாக பிரித்து பணி மேற்கொள்ளப்படும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், மறைமலை நகரிலிருந்து சிங்கப்பெருமாள் கோயில் வரை; எஸ்.பி. கோயிலிருந்து செட்டிபுண்ணியம் வரை, மற்றும் கூடுவாஞ்சேரியில் இருந்து காட்டாங்குளத்தூர் வரையிலான பாதைகளை ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்தி, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

காட்டாங்குளத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, தைலாவரம், வெள்ளஞ்சேரி ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன, இதனால் சில இடங்கள் அகலப்படுத்துவதினால் நிலம் கையகப்படுத்தப்படுகிறது என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரி கூறுகிறார்.

சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் மற்ற ஊர்களுக்கு பயணிப்பதற்கு முக்கிய சாலையாக இருக்கும் இந்த ஜி.எஸ்.டி.யில் (NH 45), எட்டுவழி சாலை கட்டப்படுவதால் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். மேலும், இந்த வசதியினால், மற்ற வாகனங்களிலிருந்து கனரக வாகனங்களுக்கு தனிப்பாதை அமைக்கும்பட்சத்தில் விபத்துகளை தடுக்கமுடியும் என்று நம்பப்படுகிறது. 

கூடுவாஞ்சேரி - செட்டிபுண்ணியம் கிராண்ட் சதர்ன் டிரங்க் (ஜி.எஸ்.டி.) சாலையை எட்டுவழிச்சாலையாக கட்டத்தொடங்கி 25 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் சில மாதங்களில் இந்த பணி நிறைவடைந்துவிடும் என்று மாநில அரசின் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவால் நம்பப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Nhai #Chennai #Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment