Advertisment

ஜெயலலிதாவுக்கு உயர் தர சிகிச்சை அளிக்கப்பட்டது: பிரதாப் ரெட்டி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது என அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஜெயலலிதாவுக்கு உயர் தர சிகிச்சை அளிக்கப்பட்டது: பிரதாப் ரெட்டி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது என அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதியன்று இரவில் உடல்நலக் குறைவு காரணமாக திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டு வந்தது.

அதேபோல், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சுமார் 70 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் என தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி இரவு 11.30 மணியளவில் உயிரிழந்ததாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அதன்பின்னர் அவரது உடல், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது. பின்னர், சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடம் அருகே ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜெயலலிதா காலமான பின்னர், அவரது உயிரிழப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றன. அவரது மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் ஜான் பேல் மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள் குழு, கடந்த பிப்ரவரி மாதம் செய்தியாளர்களை சந்தித்து சிகிச்சை முறை குறித்து விளக்கம் அளித்தனர். ஆனால், அவர்களது விளக்கம், பல்வேறு விமர்சனங்களுக்குள்ளானது.

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது என அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், ஜெயலலிதா சிகிச்சை குறித்த அனைத்து ஆவணங்களும் பத்திரமாக உள்ளன. சிகிச்சை அளிக்கப்பட்ட 75 நாட்களில் 71 நாட்கள் தாம் சென்னையில் தான் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தினால் அதனை எதிர்கொள்ள தயார் எனவும், ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்கும் போது யாரும் தலையிடவில்லை எனவும் கடந்த மாதம் பிரதாப் ரெட்டி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bjp Dmk Jayalalithaa Sasikala Prathap Reddy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment