காவல்துறை அனுமதி இன்றி போராட்டம், கூட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் எந்தெந்த இடங்களில் போராட்டங்கள் நடத்தலாம் என காவல்துறை வரையறை செய்துள்ளது. இதற்கான பட்டியலும் இருக்கிறது. ஆனால், சமீபகாலமாக பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திடீரென பொது இடங்களில் போராட்டங்கள் நடத்தப்படுவதால் வேலைக்கு செல்வோர், பள்ளி கல்லூரிகளுக்கு செல்வோர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கோரப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நடத்திய நீதிமன்றம், முன் அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Highcourt orders to take action if any protest conducted without prior permission
வருமான வரி சோதனை : பால் தினகரன் வீடுகளில் தங்கம் மற்றும் 120 கோடி பறிமுதல்
என் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க: வீடியோவில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை
கட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி
சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி