”இரோம் சர்மிளா திருமணத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது”: இந்து மக்கள் கட்சி மனு

இரோம் சர்மிளா திருமணத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்து, இந்து மக்கள் கட்சி சார்பில் சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இரோம் சர்மிளா திருமணத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்து, இந்து மக்கள் கட்சி சார்பில் சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
”இரோம் சர்மிளா திருமணத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது”: இந்து மக்கள் கட்சி மனு

மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை விலக்கிக் கொள்ள வலியுறுத்தி, 16 ஆண்டுகளாக போராடிய இரோம் சர்மிளா, அவரது காதலனுடன் கொடைக்கானலில் திருமணம் நடைபெற்றால் கொடைக்கானலின் அமைதி கெடும் எனக்கூறி, திருமணத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்து, இந்து மக்கள் கட்சி சார்பில் சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Advertisment

மணிப்பூரை சேர்ந்த இரோம் சர்மிளா, சர்ச்சைக்குரிய அஃப்ஸ்பா எனப்படும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை விலக்கிக்கொள்ள வலியுறுத்தி, 16 ஆண்டுகளாக சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார். இந்நிலையில், அரசியல் உரிமையே தனக்கான போராட்டத்தை வெற்றியை நோக்கி எடுத்துச் செல்லும் எனக்கூறி, இரோம் சர்மிளா கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

அதன்பின், மக்கள் எழுச்சி மற்றும் நீதிக்கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மணிப்பூர் சட்டசபை தேர்தலில் அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஒக்ராம் இபோபியை எதிர்த்து தௌபால் தொகுதியில் போட்டியிட்டார்.

ஆனால், தன் மக்களின் நலனுக்காக 16 வருடங்களாக போராடிய இரோம் சர்மிளாவை அம்மக்கள் வெறும் 90 ஓட்டுகளுடன் படுதோல்வியடைய செய்தனர். அதன்பிறகு தன் காதலரான அயர்லாந்த் நாட்டை சேர்ந்த தேஸ்மண்ட் ஹட் ஹோவிடன்-ஐ திருமணம் செய்துகொண்டு வாழ விரும்புவதாக தெரிவித்த இரோம் சர்மிளா, தன் காதலருடன் கொடைக்கானலில் குடியேறினார்.

Advertisment
Advertisements

இந்நிலையில், இரோம் சர்மிளா தன் காதலர் தேஸ்மண்ட் ஹட் ஹோவிடனுடன் திருமணம் செய்துகொள்வதற்காக கடந்த ஜூலை மாதம் 12-ஆம் தேதி கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்தார்.

publive-image

இரோம் சர்மிளாவின் காதலர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் இந்தியாவில் யாருக்கேனும் அவர்களுடைய திருமணத்தில் ஆட்சேபனம் இருந்தால் இந்த ஒரு மாத காலத்திற்குள் தெரிவிப்பர். யாருக்கும் ஆட்சேபனம் இல்லாத பட்சத்தில் ஒரு மாத காலத்திற்கு பிறகு அவர்களுடைய திருமணம் நடைபெறும்.

இந்நிலையில், பேத்துப்பாறையை சேர்ந்த மகேந்திரன் என்பவர், இரோம் சர்மிளாவின் திருமணத்தை எதிர்த்து கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு அளித்தார். அவர்களுடைய திருமணத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது எனவும் அவர் அந்த மனுவில் கோரிக்கை விடுத்தார்.

தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் இரோம் கொடைக்கானலில் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக தான் போராடவிருப்பதாக கூறியுள்ளதாகவும், அவ்வாறு போராடினால் அது கொடைக்கானலின் அமைதியை குலைத்துவிடும் அவர் தன் மனுவில் தெரிவித்தார்.

இந்நிலையில், அவரது திருமணத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என இந்து மக்கள் கட்சி சார்பிலும் சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ரவிக்குமார் இதுகுறித்து கூறுகையில், ”கொடைக்கானலில் திருமணம் செய்து அவரை இங்கேயே நிரந்தரமாக தங்க அனுமதிக்கப்பட்டால், கொடைக்கானலின் அமைதி கெடும்”, என தெரிவித்தார்.

Irom Sharmila Desmond Coutinho

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: