சந்திரயான்- 3 விண்கலம் புதன்கிழமை (ஆக. 23) மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கியது. இதுவரை எந்த நாடும் செல்லாத நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்ய சந்திரயான்- 3 விண்கலம் அனுப்பபட்டு உள்ளது.
இதைக் காண கிண்டியில் உள்ள பிர்லா கோளரங்கத்திலும் இந்நிகழ்வை காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சந்திரயான்3 திட்ட இயக்குனர் வீரமுத்து வேலுக்கு டெலிபோனில் தொடர்பு கொண்டு மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, “நீங்கள் தமிழ்நாடு வரும்போது சொல்லுங்கள், வந்து சந்திக்கிறேன்” என்றார். முன்னதாக வாழ்த்துகள் தெரிவித்த அவர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார். அதற்கு திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் நன்றி தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“