கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ரூ 1000 பெற விண்ணப்பிக்கும் போது பயனாளர்களின் கைவிரல் ரேகை பதிவு கட்டயாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், குடும்பத் தலைவிகள் மாதம் தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை பெற விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு அண்மையில் வெளியிட்டது.
இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ரூ 1000 பெற விண்ணப்பிக்கும் போது பயனாளர்களின் கைவிரல் ரேகை பதிவு கட்டயாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பவர்களின் கைவிரல் ரேகை பதிவு செய்வதற்காக, ஜூலை 17-ம் தேதிக்குள்ளாக அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து துணை ஆணையர்களுக்கும் உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"