Advertisment

பிரபல ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு.. என்ன காரணம்?

உணவகங்கள், இனிப்பகங்களின் பிற கிளைகளில், வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பிரபல ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு.. என்ன காரணம்?

தமிழகம் முழுவதும் 32 பிரபல உணவகங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

வருமான வரித்துறையினர் ரெய்டு.

சென்னையில் உள்ள உணவகங்களான சரவணபவன், அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸ் உள்ளிட்ட உணவு நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் திடீரென்று சோதனை நடத்தி வருகின்றனர். இந்த உணவகங்களின் அனைத்துக் கிளைகள், இயக்குனர்களின் வீடுகள் மற்றும் கார்பரேட் அலுவலகங்கள் என இந்நிறுவனங்களுக்கு சொந்தமான, மாநிலம் முழுவதும் உள்ள 32 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

publive-image

இந்த உணவகங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகப் புகார் வந்ததை அடுத்து இந்த அதிரடி சோதனை நடைபெறுவதாக தெரிகிறது.ரெய்டு நடப்பதால், ரெய்டுக்கு உள்ளாகிய நிறுவனத்தின் உணவகங்கள், இனிப்பகங்களின் பிற கிளைகளில், வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவகங்களின், தலைமை அலுவலகங்கள் மட்டுமின்றி, மேலாளர்கள் வீடுகளிலும் ரெய்டு நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சைவ, அசைவ உணவுப் பிரியர்களுக்கு பிடித்த உணவகங்களான சரவணபவன், அஞ்சப்பர் ஹோட்டல்களில் நடத்தப்பட்டு வரும் இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

It Raid
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment