அதிமுக-வில் நிலவும் உட்கட்சிப் பூசலை தீவிரப்படுத்தும் வகையில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தொடர்புடைய இடங்கள் என தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தஞ்சை, பெங்களூர் என 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறும்போது: சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வீடுகள், நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவது என்பது அரசியல் நோக்கம் கொண்டது. அதிமுக-வில் நிலவும் உட்கட்சிப் பூசலை தீவிரப்படுத்தும் நோக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.