உயர்நீதிமன்றத்தின் தடையை மீறி ஜாக்டோ - ஜியோ தொடர் வேலைநிறுத்தம் அறிவிப்பு!

ஜாக்டோ - ஜியோ அமைப்பின் ஆசிரியிர் கூட்டமைப்பினர் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

ஜாக்டோ - ஜியோ அமைப்பின் ஆசிரியிர் கூட்டமைப்பினர் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
உயர்நீதிமன்றத்தின் தடையை மீறி ஜாக்டோ - ஜியோ தொடர் வேலைநிறுத்தம் அறிவிப்பு!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து ஜாக்டோ- ஜியோ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தையே அமல்படுத்திட வேண்டும். சிறப்புக் காலமுறை மற்றும் தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்து 7-வது ஊதிய குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisment

முதற்கட்டமாக ஜூலை 18-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதையடுத்து, கடந்த 5-ம் தேதி சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். இதன் தொடர்ச்சியாக மூன்றாவது கட்டமாக கடந்த 22-ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து, நடைபெற்ற ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் கூட்டத்தில், செப்டம்பர் 7-ம் தேதி முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கும். ஏழாம் தேதியன்று வட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறும். செப்டம்பர் 8-ம் தேதியன்று மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறும். தமிழக அரசு ஜாக்டோ ஜியோ தலைவர்களை உடனடியாக அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் செப்டம்பர் 10-ம் தேதி அன்று ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் கூடி தீவிரமான அடுத்தகட்ட போராட்டத்தை அறிவிப்பார்கள் என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதனிடையே, தமிழக அரசுடன் அந்த அமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க சென்ற தமிழக முதல்வருடன் ஈரோட்டில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Advertisment
Advertisements

முதல்வர் அளித்த நம்பிக்கையை தொடர்ந்து போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அந்த அமைப்பின் சில பிரிவுகள் அறிவித்தன. ஆனால், அதற்கு பெரும்பாலானோர் ஆதரவளிக்கவில்லை. அதேசமயம், அந்த அமைப்பின் சில பிரிவுகள் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவித்தனர்.

முன்னதாக, ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என சேகரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதனை விசாரித்த உயர்நீதிமன்றம், போராட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், ஜாக்டோ - ஜியோ அமைப்பின் ஆசிரியிர் கூட்டமைப்பினர் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது, "வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி(திங்கள்) முதல் மீண்டும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளோம். செப்டம்பர் 13-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக போராட்டம் நடைபெறும். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்பார்கள்" என்று தெரிவித்துள்ளனர்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: