தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் காளிராஜ். பட்டியலின வகுப்பினை சேர்ந்த காளிராஜ் மகன் ஹரிபிரசாத், கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி11ம் வகுப்பு கணக்குப்பதிவியல் பிரிவில் படித்து வருகின்றார். இதே பள்ளியில் தான் கழுகுமலையை சேர்ந்த ராஜகுரு, ஷேமந்த் குமார் ஆகியோர் 11ம் வகுப்பு அறிவியல் பாட பிரிவில் பயின்று வருகின்றனர்.
Advertisment
இந்நிலையில், நேற்று மாலையில் பள்ளிக்கு வெளியே ராஜகுரு, ஹேமந்த் குமார் இருவரும் வெளியே சண்டை போட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக வந்த மாணவர் ஹரி பிரசாத் இருவரும் சண்டை போடுவதை தடுத்துள்ளார். பின்னர் ராஜகுரு 10 பேரை அழைத்துக்கொண்டு நேற்று இரவில் லட்சுமிபுரம் சென்று ஹரி பிரசாத்தை ஜாதி ரீதியாக திட்டி தாக்கி உள்ளார்.
இதில் ஹரி பிரசாத் காயம் அடைந்தார். அந்த சண்டையில் அவருடைய செல்போன் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. காயமடைந்த ஹரிபிரசாத் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பம் குறித்து கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், நாங்குநேரி பள்ளியில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த மாணவர் மற்றும் அவரது தங்கை தங்களது வீட்டிலே தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது கழுகுமலையில் பட்டியலின மாணவர் மீது மாற்று சமுதாயங்களைச் சேர்ந்த மாணவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil