இந்தி மொழி திணிப்புக்கு எதிராக கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி டிரெண்ட் ஆகியுள்ளது.
இந்தியா இன்னும் சுதந்திர நாடாக இருப்பதை நிருபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.
புதிய திட்டங்களோ
சட்டங்களோ இயற்றப்படும் பொழுது அது மக்களிடம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும்.
வெள்ளையனை வெளியேற்றியது வெற்று நாயகத்திற்காக அல்ல ஜனநாயகத்திற்காக. pic.twitter.com/xH6c0ANvQh— Kamal Haasan (@ikamalhaasan) September 16, 2019
தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் மீண்டும் இந்தியை திணிக்க மத்திய பாஜக அரசு முயன்று வருகிறது. இந்நிலையில், இந்தி தின கொண்டாட்டத்தின்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "இந்திதான், நாட்டு மக்களை இணைக்கும், மொழி" என்று கருத்து தெரிவித்துள்ளார்.அவரின் இந்த கருத்து , மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் இந்தி திணிப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரும் , நடிகருமான கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள வீடியோ வெளியிட்டுள்ளார். அவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
கமல் அந்த வீடியோவில், இந்தியா இன்னும் சுதந்திர நாடாக இருப்பதை நிருபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். புதிய திட்டங்களோ, சட்டங்களோ இயற்றப்படும் பொழுது அது மக்களிடம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். வெள்ளையனை வெளியேற்றியது வெற்று நாயகத்திற்காக அல்ல ஜனநாயகத்திற்காக, என்று கமல் கூறியுள்ளார்.
1950-ல் இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட போது, மொழி உரிமை குறித்த சத்தியத்தை அரசு மக்களுக்கு செய்தது. அந்த சத்தியத்தை திடீரென்று எந்த ஷாவோ, சுல்தானோ, சாம்ராட்டோ மாற்றிவிட முடியாது. அவர்கள் அதற்கு கொஞ்சம் கூட முயற்சிக்கக் கூடாது. அப்படி நினைத்தால் புரட்சி வெடிக்கும்.
ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஒரு சிறிய போராட்டம், சிறிய வெற்றி. எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் துவங்கினால், அது வேறு மாதிரி இருக்கும். அதன் அழுத்தம் வேறு மாதிரி இருக்கும். அது பன்மடங்கு பெரிதாக இருக்கும். அந்த ஆபத்து இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டிற்கோ தேவையற்றது, அவசியம் இல்லாதது. அந்த நிலைமை உருவாக கூடாது.
இந்தியர்கள் தங்கள் தேசிய கீதத்தை அவர்கள் மொழிகளில் பாடுவதில்லை. நம் இந்திய தேசிய கீதத்தை வங்காளத்தில் சந்தோசமாக பாடுகிறோம். ஏனென்றால் அந்த தேசிய கீதம் எல்லாம் கலாச்சாரம் குறித்தும் பேசுகிறது. அதனால்தான் அது தேசிய கீதம்.
வேற்றுமையில் ஒற்றுமையை எங்களால் காண முடியும். வாழிய செந்தமிழ்!, வாழ்க நற்றமிழர்!, வாழிய பாரத மணித்திரு நாடு! என்று கமல்ஹாசன் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.