கனிமொழி பேஸ்புக்கில் பதிவு ஒன்றை பதிவு செய்திருந்தார். அந்தப் பதிவில், “கோபிசெட்டிபாளையம் சார்பதிவாளர், இணையர் லெனின் - சிந்து ஆகியோரது சுயமரியாதை திருமணத்தைப் பதிவு செய்ய மறுத்துள்ளார்.
இந்நிலையில், திராவிடர் கழகத்தினர் போராட்டத்திற்குப் பின் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சாதி, மத, வர்க்க பேதங்களை மறுத்துவரும் காதல் இணையர்களின் வாழ்வுரிமைக்கு உறுதியளிக்கும் வகையில் இயற்றப்பட்ட சுயமரியாதை திருமணச் சட்டத்தை அவமதிப்பதை ஒருபோதும் ஏற்கமுடியாது.
தமிழ்நாட்டிற்கு என்று ஒரு வரலாறு உண்டு. மக்கள் பணி செய்யவரும் அரசு ஊழியர்கள் அதைப் புரிந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“