Advertisment

சுயமரியாதை திருமணத்தை பதிவு செய்ய மறுப்பு: கனிமொழி எச்சரிக்கை

சுயமரியாதை திருமணத்தை பதிவு செய்ய மறுத்ததை ஏற்க முடியாது என கனிமொழி எம்.பி. எச்சரித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kanimozhi MP has warned that refusal to register self-respecting marriages is not acceptable

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி

கனிமொழி பேஸ்புக்கில் பதிவு ஒன்றை பதிவு செய்திருந்தார். அந்தப் பதிவில், “கோபிசெட்டிபாளையம் சார்பதிவாளர், இணையர் லெனின் - சிந்து ஆகியோரது சுயமரியாதை திருமணத்தைப் பதிவு செய்ய மறுத்துள்ளார்.

இந்நிலையில், திராவிடர் கழகத்தினர் போராட்டத்திற்குப் பின் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Advertisment

சாதி, மத, வர்க்க பேதங்களை மறுத்துவரும் காதல் இணையர்களின் வாழ்வுரிமைக்கு உறுதியளிக்கும் வகையில் இயற்றப்பட்ட சுயமரியாதை திருமணச் சட்டத்தை அவமதிப்பதை ஒருபோதும் ஏற்கமுடியாது.

தமிழ்நாட்டிற்கு என்று ஒரு வரலாறு உண்டு. மக்கள் பணி செய்யவரும் அரசு ஊழியர்கள் அதைப் புரிந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kanimozhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment