காரைக்குடி பள்ளத்தூரில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் இரண்டாவது முறையாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இந்த தாக்குதலினால் கடையின் விற்பனையாளர் அர்ஜுனன் படுகாயம் அடைந்துள்ளார்.
பள்ளத்தூர் அரசு டாஸ்மாக் கடையின் மீது வாலிபர் ஒருவர் இரண்டாவது முறையாக பெட்ரோல் குண்டு வீசியதால், விற்பனையாளர் அர்ஜுனன் படுகாயம் அடைந்துள்ளார். பாதிக்கப்பட்ட அவரை மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தீயில் எரிந்து டாஸ்மாக் கடையில் இருந்த பணம் மற்றும் மதுபானங்கள் சேதம் அடைந்துள்ளது. அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மது பாட்டில் விற்பனை செய்ததால் வாலிபர் இந்த செயலை செய்துள்ளார் என்று காவல்துறையின் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil