Advertisment

நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 9 தொகுதிக்கு குறையாமல் போட்டியிட வேண்டும் என்பதே எங்கள் நிலைபாடு : கார்த்தி சிதம்பரம்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 9 தொகுதிக்கு குறையாமல் போட்டியிட வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்று சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
tamil news

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 9 தொகுதிக்கு குறையாமல் போட்டியிட வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்று சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Advertisment

சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்  கூறியதாவது : ” இந்தியா கூட்டணியின் ஒற்றுமை, வலிமை , உரிமையை  மகளிர் உரிமை மாநாடு வெளிப்படுத்தி உள்ளது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியிருந்தாலும், அதனை அமல்படுத்துவதில் சிக்கல் உள்ளது. முதலில் மக்கள் தொகை கணக்கீடு செய்ய வேண்டும். அதன் பின்னர் தொகுதி சீரமைக்கப்பட வேண்டும். அதன் பின்னரே அமல்படுத்த முடியும். சோனியாகாந்தி கட்சியின் தலைவி என்பதால் ஒற்றுமையாக செயல்படுங்கள் என கூறியது வழக்கமான அறிவுரை. மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் ஆள் மாறாட்டம் நடைபெற்றுள்ளது. ஆள் மாறாட்ட விவகாரம் என்பது மத்திய அரசின் நிர்வாக கட்டுப்பாடு மோசமான நிலையில் உள்ளது என்பதையே காட்டுகிறது.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க,  காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 39 தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றிபெறும். கடந்த தேர்தலைபோல் இந்த முறையும் 9 தொகுதிக்கு குறையாமல் போட்டியிட வேண்டும் என்பதே  கட்சியின் நிலைபாடு” என்று கூறினார்.   

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment