Advertisment

தேடப்படும் நபராக கார்த்தி சிதம்பரம் அறிவிப்பு: நாளை மறுநாள் மீண்டும் விசாரணை

தேடப்படும் நபராக கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் மீதான விசாரணை நாளை மறுநாள் மீண்டும் நடைபெறவுள்ளது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
தேடப்படும் நபராக கார்த்தி சிதம்பரம் அறிவிப்பு: நாளை மறுநாள் மீண்டும் விசாரணை

தேடப்படும் நபராக கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் மீதான விசாரணை நாளை மறுநாள் மீண்டும் நடைபெறவுள்ளது.

Advertisment

மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது இந்திராணி மற்றும் பீட்டர் முகர்ஜியின் "ஐஎன்எக்ஸ் மீடியா" நிறுவனத்திற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்று பெற்றுத் தருவதற்காக மொரிஷியஸில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக அவரது வீடு உள்ளிட்ட 17 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டவர்களின் மீது வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் தேவையான ஆவணங்களுடன் ஜூலை 21-ம் தேதியன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்திற்கு இரண்டாவது முறையாக சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால் விசாரணைக்கு ஆஜராகாத கார்த்தி சிதம்பரம், அந்த சம்மனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விடக்கூடாது என்பதற்காக (அவரை தேடப்படும் நபராக அறிவித்து) அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸை சிபிஐ அறிவுறுத்தலின் பேரில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் குடியுரிமை அலுவலகம் கடந்த ஜூலை 18-ம் தேதி பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவு நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், சிபிஐ தரப்பில் அனுப்பிய அனைத்து சம்மனுக்கும் முறையாக வழக்கறிஞர்கள் மூலமாக பதில் மனு தாக்கல் செய்துள்ளேன். இதே போல் எனக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்க துறை சார்பில் இதுவரை பதிவு செய்த அனைத்து வழக்குகளையும் நான் சட்டபடி எதிர் கொண்டு வருகின்றேன். இது தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றேன். அந்த சம்மனுக்கு எதிராக நான் தொடர்ந்த வழக்கும் நிலுவையில் இருந்து வரும் நிலையில், எனக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்து இருப்பது சட்டத்திற்கு புறம்பானது. எனவே அதனை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.துரைசாமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, "மனுதாரருக்கு எதிராக இப்படி ஒரு நோட்டீஸை மத்திய அரசு பிறப்பித்துள்ளதா? என்பதை சம்மந்தப்பட்ட துறையில் உறுதி செய்ய போதிய கால அவகாசம் தேவை: என்றார். அது போல கார்த்தி சிதம்பரம் தரப்பிலும் மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை வருகிற 7-ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

P Chidambaram Karti Chidambaram Inx Media Peter Mukerjea Indirani Mukerjea
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment