/tamil-ie/media/media_files/uploads/2017/05/karunas.jpg)
திருவட்டாணை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ். இவர் முக்குலத்தோர் படை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார்.
ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுக இரண்டாக உடைந்த போது, சசிகலா அணிக்கு ஆதரவாக செயல்பட்டார். இரண்டு நாட்களுக்கு முன்னதாக, பெங்களுரு சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து பேசினார். இந்நிலையில் இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார்.
முதல்வரை சந்தித்து பேசிய பின்னர் வெளியே வந்த கருணாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்வரிடம் தொகுதி பிரச்னை குறித்துப் பேசினேன். குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதில் தோழமை கட்சி தலைவர் என்பதால் ஆர்வமாக இருக்கிறேன். இரண்டு அணிகளும் இணைய வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரத்தில் சசிகலாவை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்பதில் முரண்படுகிறேன் என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.